சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.018
திருநாவுக்கரசர்
தேவாரம்
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், பண் - திருக்குறுந்தொகை (திருக்கடம்பந்துறை (குளித்தலை) ) Audio: https://www.youtube.com/watch?v=JV1NmqKXpHM |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.018  
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கடம்பந்துறை (குளித்தலை) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும், கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப் பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே. | [1] |
தனகு இருந்தது ஓர் தன்மையர் ஆகிலும், முனகு தீரத் தொழுது எழுமின்களோ! கனகப்புன் சடையான் கடம்பந்துறை நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே. | [2] |
ஆரியம் தமிழோடு இசை ஆனவன், கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன், காரிகை உடையான், கடம்பந்துறை, சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே! | [3] |
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை- வண்ண நல் மலரான், பல தேவரும், கண்ணனும்(ம்), அறியான் கடம்பந்துறை நண்ண, நம் வினை ஆயின நாசமே. | [4] |
மறை கொண்ட(ம்) மனத்தானை மனத்துளே நிறை கொண்ட(ந்) நெஞ்சின் உள் உற வைம்மினோ! கறைகண்டன்(ன்) உறையும் கடம்பந்துறை சிறைகொண்ட(வ்) வினை தீரத் தொழுமினே! | [5] |
நங்கை பாகம் வைத்த(ந்) நறுஞ்சோதியைப் பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ! கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை, அங்கம் ஓதி அரன் உறைகின்றதே. | [6] |
அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்; கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை உரிய ஆறு நினை, மட நெஞ்சமே! | [7] |
பூ மென்கோதை உமை ஒருபாகனை ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்! காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே. | [8] |
பார் அணங்கி வணங்கிப் பணி செய நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர் காரணன் கடம்பந்துறை மேவிய ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே | [9] |
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட! பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்; காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே. | [10] |